சாட்சியங்கள்:-
முதல் சாட்சி:
1978 ஆம் ஆண்டு ஓரகடம் கூட் ரோட்டில் வசித்து வந்தவர் ராணி. இவர் ஓர் இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். மனநிலை பாதிக்கப்பட்ட அவரை கணவரும், குழந்தைகளும் கைவிட்டு விட்டனர். தன்னிலை மறந்தவராய் தன்மானம் இழந்தவராய் ஊர் ஊராய் சுற்றி அலைந்தார். முடிவாக அவர் எறையூர் கிராமத்தை வந்தடைந்தார்.
அங்கு ஆசிரியர் ஜார்ஜையும், அவரது துணைவியாரையும் சந்தித்தார். அவர்களது வற்புறுத்தலின் பேரில் தினந்தோறும் புனித அந்தோணியார் ஆலயத்தினை சுற்றி வந்து தன்னை குணமாக்க வேண்டும் என்று புனிதரின் பரிந்துரையை நாடினார். சில நாட்களிலேயே அவர் மிகவும் அற்புதமாக முழுமையாக குணமடைந்தார். அதுமுதல் அவர் புனித அந்தோணியாரின் பக்தையாக மாறிவிட்டார். அவரை விட்டுப் பிரிந்து சென்ற குடும்பத்தினர் அவரிடம் வந்து சேர்ந்தனர். அதுமுதல் இன்று வரை அவர் ஒவ்வொரு ஆண்டும் அவரது திருவிழாவின் போது நேர்த்திக் கடனை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இறைவனது மகிமைப் பெருமைகளையும் புனித அந்தோணியாரின் பரிந்துரையின் ஆற்றலையும் அவரைப் போன்ற இந்து மக்களிடம் நாளும் அறிவித்து வருகிறார்.
இரண்டாம் சாட்சி:
அந்தோணி ராஜ் குடும்பம். பட்டதாரி ஆசிரியரான இவர் பிறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன் அவரது அம்மா ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பொழுது இருந்து புனிதர் ஆலயத்தை 3 முறை சுற்றி வந்து மதியம் 12 மணிக்கு குளத்திற்கு வந்து குளக்கரையின் மேல் துணிகளுடன் தலையில் தண்ணீர் ஊற்றி ஒறுத்தல் செய்து வந்தனர்.
10 ஆண்டுகளில் பாலம்மாவின் தவ முயற்சிக்கு பரிசாக எழுச்சூர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பேருந்தில் இறைவன் அந்த குடும்பத்துக்கு ஓர் அழகிய குழந்தையை கொடுத்தார். புனிதரின் பரிந்துரையால் பிறந்ததால் ராய இன்னயா பாலம்மாள் தம்பதியர் தன் அருமை மகனுக்கு அந்தோணி ராஜ் என்று புனிதரின் பெயரோடு இணைத்து பெயர் வைத்தனர். இன்றளவும் அக்குடும்பம் புனிதரின் பரிந்துரையால் பல்வேறு நன்மைகளை அடைந்து இறைவனுக்கு சான்று பகர்ந்து கொண்டிருக்கிறது.
மூன்றாம் மற்றும் நான்காம் சாட்சி:
ஜந்தாம் சாட்சி:
No comments:
Post a Comment